பாஜகவுக்கு ஒரு கோடி வாக்கு கிடைத்தால் ரூ.70க்கு மதுபானம் விற்கப்படும் என ஆந்திர மாநில பாஜக தலைவர் வாக்குறுதி அளித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநில பாஜக தலைவர் சோமு வீரராஜு செவ்வாயன்று விஜயவாடாவில் நடந்த ஒரு கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “வரும் 2024-இல் ஆந்திர மாநிலத்தில் பாஜக ஆட்சியைக் கைப்பற்றும். அதற்கு மக்கள் அனைவரும் பாஜகவுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
பாஜகவுக்கு மக்கள் ஒரு கோடி வாக்களித்தால் நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் ரூ.70 விலையில் மதுபானங்களை வழங்குவோம். தவிர அதிக அளவில் நிதி இருந்தால் ரூ.50 விலையில் மதுபானம் அளிக்கப்படும்” என அவர் கூறியுள்ளார். மக்களுக்கான பிரச்சனைகள் எத்தனையோ இருக்கும்போது மதுபானம் தொடர்பாக மட்டும் பாஜக தலைவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.